மிகப்பெரிய குளறுபடி ரிசர்வ் வங்கி செய்தது!
Posted on 17/12/2016
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் கருப்பு பனத்தை ஒழிப்பதற்காக புழகத்தில் இருந்து நீக்கியது. .
இந்நிலையில் ரிசர்வ் வங்கி போலி 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த கதை தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் நோட்களில் வெள்ளி நூல் மிகவும் முக்கியமானது
சாமானிய மக்கள் வரை அனைவரும் இதனைக் கொண்டு தான் கள்ள நோட்டிற்கும், அரசாங்க நோட்டிற்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஏனெனில் இது கண்களுக்கு எளிதாகப் புலப்படுபவை.
இத்தகைய சிறப்புடைய வெள்ளி நூல் இல்லாமல் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி ஜனவரி 2016 மாதத்தில் அச்சடித்துள்ளது.
ரிசர்வ் வங்கி தவறுதலாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துவிட்டது. இவை அனைத்தும் 5AG, 3AP வரிசையில் அடிக்கப்பட்டுள்ளது. இனி வெளிவ்ரும் 1000 நோட்டுகளில் இந்த எண் இருந்தால் அதிகாரப்பூர்வமாகச் செல்லாது எனவும், இதனை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் விரைவான நடவடிக்கையின் மூலம் பெருமளவிலான தொகை விரைவில் பிடிக்கப்பட்டது
மத்திய பிரதேசத்தில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்-இல் உள்ள Security Printing and Minting கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்-இல் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை அனைத்தும் தீயிட்டு எரிக்க ஆர்பிஐ மற்றும் நிதியமைச்சகம் முடிவு செய்து முழுமையாக எரித்தது.
Tags: News, Madurai News, Institute